districts

விவசாய தொழிலாளர் சங்க  புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, அக்.13- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின்  புதிய கிளை துவக்க விழா சேஷசமுத்திரம் பொக்கட்டக் குடியில் புதனன்று நடைபெற்றது.  விழாவிற்கு செல்வி தலைமை வகித்தார். விழாவில் விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் சந்திரன், வழக்கறிஞர் வின்சென்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் லால்குடி ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன், சங்க  ஒன்றியச் செயலாளர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.  விவசாய தொழிலாளர்களுக்கு சட்டக் கூலியை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலையினை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும். அரசு வழங்கும் கூலி ரூ.283-ஐ  முழுமையாக வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழாவில் கிளை தலைவராக எம்.மணிமேகலை, செயலாளராக ஆர்.செல்வி, பொருளாளராக வி.சங்கீதா,  துணைத்தலைவராக ஆர்.சாவித்திரி, உதவி செய லாளராக ஏ. ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். விழாவில், கூகூர் கணேசன் இசை நிகழ்ச்சி நடை பெற்றது.

;